ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

TORTURED14.jpg picture by unmaiadiyaan
 
 

ஈரனிலுள்ள

கிறிஸ்தவ விசுவாசிகள் உறுதியான நம்பிக்கையும்,வல்லமையான சாட்சிகளாகவும் இருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியும் இன்றைக்குக் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிற பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியரைத் தொடக்கூடியதாக இருக்கின்றது.

சமீபத்தில்

அவர்களில் 11 பேருக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் சிலாக்கியத்தைத் தேவன் எனக்கு தந்தார். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மற்றும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட இடத்தை நாங்கள் குறிப்பிடவில்லை. எண்ணிக்கையின் படி இராசியக் கிறிஸ்தவர்கள் அல்லாமல் ஐரோப்பாவில் 60 ஆயிரம் ஈரானியக் கிறிஸ்தவர்களும்,அமேரிக்காவில் 77 ஆயிரம் பேரும் உள்ளனர்.அமேரிக்காவில் மட்டும் இரகசியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் முதல் 3 லட்சமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவர்கள் அனைவரும் தங்களது விசுவாசத்தில் உறுதியாக நின்று தங்களுக்கு நேரிடுகிற உபத்திரவங்களைத் தைரியமாக சந்திக்கும்படி தயவு செய்து இவர்களை உங்களது ஜெபத்தில் தாங்குங்கள் .

ஈரானில்

1979ல் புரட்சி நடந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு இஸ்லாமியர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளான ஈரான்,சவுதி அரேபியா ,ஏமன்,பூட்டான்,நேப்பாளம் ,மியான்மார்,திபெத்,வங்காள தேசம் ,அப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் ஊழியம் செய்து வருகிறோம் .சுவிசேம் சந்திக்கப்படாத மக்களை படக்கதை,இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் கொடுத்து மக்களை சந்தித்து வருகிறோம்.தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள் .

 

SOURCE;TORTURED FOR CHRIST-FEB-2007