இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

கிறிஸ்தவம் ஓர் மனோதத்துவம்

 

 

மனிதர்களின் இயல்பு
அன்பான சகோதரனே சகோதரியே..,

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாராக இருந்தாலும் மற்ற ஏதாவது ஒன்றின் மேல் அன்பு செலுத்தியே ஆக வேண்டும். இதுவே மனிதனின் பொதுவான இயல்பு.  தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, கனவன், மனைவி, நண்பர்கள், காதலர்கள், என எதாவது மனிதர்கள் மீதும், சிலர் கார் பைக் தொழில், என உயிரில்லாத பொருட்கள் மீதும். இன்னும் பரிதாபத்திற்குரிய சிலர் பாம்பு பல்லி ஓனான், போன்ற பூச்சிகள் மீதும் விலங்குகள் மீதும் செல்லப்பிரானிகள் என்ற பெயரில் அன்புசெலுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 

மனிதர்களின் அன்பு நிலையற்றது

மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு நிலையற்றது, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. எதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது உறவு முறிந்து விடுகிறது. பூச்சிகள், விலங்குகள் மற்றும் உயிரில்லாத பொருட்களின் மேலுள்ள அன்பை  அவைகள் புரிந்து கொள்ள முடியாது மீறிப் புரிந்துகொண்டாலும் அவைகளால் திரும்பவும் அன்பு செலுத்த முடியாது.

அன்பான சகோதரனே சகோதரியே…..
நீங்களும் இது போன்ற சூழ்நிலையில் இருக்கலாம். உறவுகள் முறிந்து ஏமாற்றப்பட்டு… ஐயோ… இந்த உலகில் எனக்கென யாருமே இல்லையா?…. என மனதளவில் கதறிக் கொண்டிருக்கலாம். உள்ளம் உடைந்து விரக்தியில் தற்கொலை எண்ண‌த்தோடுகூட இருக்கலாம். நீங்கள் ஏதாவது கோபத்தினால்  மற்றவர்களைத் துன்பப்படுத்தியதனால் மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போயிருக்கலாம். குற்ற உணர்ச்சி உங்களை வாட்டலாம்.

அன்பான சகோதரனே சகோதரியே…..
நீங்கள் யாராகவேண்டுமானால் இருக்கலாம் எவ்வளவு கொடுமையான பாவங்களையும் செய்திருக்கலாம் அதனால் உங்களை அனைவரும் கைவிட்டிருக்கலாம்.

உங்களையும் புரிந்து கொண்டு அரவனைத்து ஆறுதல் சொல்லவும், அன்பு செலுத்தவும் ஒரு நண்பர் இருக்கிறார். உங்கள் நல்ல உள்ளத்தை மட்டும் எதிர்பார்த்து…….

உங்களை எதிர்பார்த்து கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கும் அந்த நண்பர் இவ்வுலகின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே ஆவார்.

அவரை நண்பராகப் பெற்றால் உங்களுக்கு என்ன நன்மை?

(1) உங்கள் பாவமும் சாபமும் மன்னிக்கப்படும்

(2) நிரந்தரமான தாயும் தகப்பனும் சகோதரனுமாகிய ஒரு நண்பர் உங்களுக்குக் கிடைப்பார். (நீங்கள் அவரைவிட்டு விலகினால் ஒழிய அவர் உங்களை விட்டு விலகவே மாட்டார்.)

(3) உங்கள் எதிகாலத்தைப் பற்றிய மற்றும் தோல்விகளைப் பற்றிய பயம் உங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விடும் ஆம் அவைகளை இயேசுகிறிஸ்துவே ஏற்றுக்கொள்வார் நீங்கள் வேண்டிகொள்வ‌தற்கும் நினைப்பதற்கும் அதிகமான நன்மையான காரியங்களை உங்களுக்குச் செய்வார்.

(4) நீங்கள் உங்கள் தேவைகளை சரியான காலங்களில் பெற்றுக்கொண்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வீர்கள்……

 

இப்படிப்பட்ட நண்பரைப் பெற்றுக்கொள்ள ஆசையா? அவர் உங்கள் வாழ்வில் வந்து உங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமா?
அப்படியானால் இந்த சிகப்பு (Clik RedBox) பெட்டியை  சொடுக்குங்கள்……………………….……………………………….>

 

ஒரு வேளை இப்படிப்பட்ட ஒரு அருமையான நண்பரைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா? அப்படியானால் நீங்கள் நீல நிற (Clik BlueBox) பெட்டியை சொடுக்குங்கள்…………………………………………………………………………..>

 
 

(02)ஆதாம் ஏவாளும் பிசாசின் வஞ்சனையும்

 


 

ஏதேன் தோட்டம்
கடவுள் உலகைப் படைத்தபின், உலகின் மையத்தில் அனைத்து வளங்களும், சந்தோஷங்களும் நிறைந்த ஒரு தோட்டத்தை உருவாக்குகினார். இதற்கு 'ஏதேன்' எனப் பெயர்.

ஏவாளின் தோற்றம்
மன்னால் செய்யப்பட்ட‌ ஆதாமுக்கு தன் மூச்சுக்காற்றை ஊதி ஆதாமுக்கு உயிர் கொடுத்து ஏதேன் தோட்டத்தில் அவனை நிறுவினார்.அவன் தனிமை கண்டு கடவுள், இவனுக்கு ஒரு துணையை செய்வோம் என, அவனைத் தூங்கச் செய்தார். ஆதாம் தூங்கும்போது அவனது விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணைச் செய்து ஆதாமிடம் கொண்டுவந்தார். அவனும் அவளுக்கு 'ஏவாள்' எனப் பெயரிட்டழைத்தான்.

ந‌ன்மை தீமை அறியும் க‌னி
அந்தத் தோட்டத்தின் நடுவில்தான் நன்மை தீமையை உணரச்செய்யும், கனிதரும் மரம் இருந்தது.
கடவுள் ஆதாமிடம், இங்கிருக்கும் எல்லா மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம், ஆனால் நன்மை தீமையை உணரச் செய்யும் இந்த மரத்தின் கனிகளை உண்ணக்கூடாது, உண்டால் நீ இறப்பது நிச்சயம்" என எச்சரித்தார்.
ஆதாம் எல்லா உலகிலுள்ள எல்லாவற்றிற்கும் பெயரிட்டான்.
இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கமில்லாதிருந்தனர். இருவரும் ஏதேனை இன்பமாய் அனுபவித்தனர்.

பிசாசின் வஞ்சனை

பிசாசானவன் பாம்பு வடிவில் ஏவாளிடம் வந்து கேட்டது, "கடவுள் எல்லா மரக்கனிகளையும் உண்ணச்சொன்னாரா?"
ஏவாள், இல்லை நல்லது கெட்டது அறியச் செய்யும் மரக்கனி ஏதேனின் நடுவிலிருக்கிறதே அதை சாப்பிட்டால் இறப்பு வரும்" என்று சொன்னார்,என்றாள்.
பாம்பு அவளைப்பார்த்து,"அப்படியொண்றுமில்லை. அதை நீங்கள் உண்டால் உங்கள் கண்கள் திறக்கப்படும், கடவுளைப் போல நல்லது தீயதை அறிந்து கொள்வீர்கள்" என ஆசைகாட்டியது.
ஏவாள் அந்த மரக்கனிகள் பார்க்க அழகாயிருப்பதைக்கண்டாள். ஒரு கனியை எட்டிப்பறித்து சுவைத்தாள், ஆதாமுக்கும் உண்ணக்கொடுத்தாள்.கனி உண்ட மறுகணம் இருவரும் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்தனர். கடவுளின் கட்டளையை மீறிவிட்டோமென்று அறிந்தவர்களாய், வெட்கம் மேலிட, இலைதளைகளாலான ஆடை ஒன்றை செய்து அணிந்து கொண்டார்கள். கடவுள் காணாதிருக்க, மரங்களின் இடையே மறைந்திருந்தார்கள்.
அப்போது கடவுள் "ஆதாம் எங்கேஇருக்கிறாய்" எனத் தேடிவந்தார்.
ஆதாம்,"நிர்வாணமாயிருப்பதால் மறந்திருக்கிறேன்" என்றான்.
"நீ நிர்வாணமாயிருக்கிறாயென யார் சொன்னது?,
விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டாயா?", கடவுள்.

"இந்தப் பெண்தான் எனக்கு அதைக் கொடுத்தாள்", ஆதாம்
.
"இதோ பாம்புதான் என்னை உண்ணச்சொன்னது",ஏவாள்.

 

 

கடவுளின் சாபம்
கடவுள் பாம்பை சபித்தார்.
ஏவாளிடம், "உனக்கு பிள்ளை பேற்றின் வலியை தீவிரமாக்குவேன், இருந்தாலும் நீ உன் கணவனையே மீண்டும் விரும்பும்படி செய்வேன்." எனக் கடிந்தார்.
பிறகு ஆதாமிடம்,"நீ உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ் என்று சபித்தார், உன்னால் இந்த பூமி சபிக்கப்பட்டதாகிறது. மண்ணிலிருந்து பிறந்த நீ மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்" என தோல்களாலான ஆடையை அணிவித்து இருவரையும் ஏதேனைவிட்டு வெளியெற்றினார். எதேனின் அனைத்து சுகங்களையும் முடிவிலா மகிழ்ச்சியை ஆதாமும் ஏவாளும் இழந்தனர்.
 
 
மூலம்: http://bibleuncle.blog.co.in/2008/07/31/2/