சண்டையிட்ட சூரியனும் சந்திரனும்

சண்டையிட்ட சூரியனும் சந்திரனும்

ஒரு முறை சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டன. மரத்தின் இலைகள் பச்சை நிறமானவை என சூரியன் சொல்ல, இலைகள் வெள்ளி நிறமானவை என சூரியன் சாதித்தது.

பூமியின் மனிதர்கள் தூங்குகிறார்கள் என்று சந்திரன் சொல்ல,எல்லாரும் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதாக சூரியன் சாதித்தது.

பூமி அமைதியாக இருப்பதாக சந்திரன் சொல்ல,"ஒரே இரைச்சலாக இருக்கிறது" என்று சண்டைக்கே வந்து விட்டது சூரியன்.

சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை காற்று கவனித்துக்கொண்டிருந்தது.

காற்று சொல்லியது "உங்கள் சண்டை பயனற்றது.நான் சூரியன் பிரகாசிக்கும் போதும்,சந்திரன் பிரகாசிக்கும் போதும் இருக்கிறவன். பகலில் சூரியன் பிரகாசிக்கும் போது சகலமும் அது சொன்னபடியே இருக்கிறது.இரவில் சந்திரன் பிரகாசிக்கும்போது அனைத்தும் அது சொன்ன படியே இருக்கிறது.

ஆனால்,இரவில் உலகம் எப்படி இருக்கும் என்பது சூரியனுக்குத் தெரியாது.பகலில் உலகம் எப்படி இருக்கும் என்பது சந்திரனுக்குத் தெரியாது.ஆகவே உங்கள் இருவருக்குமே முழுமையான உண்மை தெரியாது" என்றது காற்று.

நாத்திகர்கள் உலகின் சடப்பொருள் தன்னையைக் கண்ணுற்று அவைகள் தான் உண்மை என்று வாதிடுகின்றனர்.

புத்த மதத்தவர் "மனம்" ஒன்று தான் உண்மையானது, மற்ற அனைத்துமே மாயையின் தோற்றங்கள் என்று கூறுகின்றனர்.

ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே முழுமையான உண்மையை உணரக் கூடியவர்கள்.அவர்கள் உலோகாயுத கொள்கைக்கோ,சிந்தனையாளர்களின் கொள்கைக்கோ கட்டுப்படமாட்டார்கள்.

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு

 

http://www.thewayofsalvation.org/2008/03/blog-post_27.html